நெஞ்சில் ஓர் ஈரம்!!

பதிவு - 1

தலைப்பு - நெஞ்சில் ஓர் ஈரம்!!

பள்ளித்தோழியின் குறுஞ்செய்தி 
புலனியில் கண்டேன்!
இளங்காலை பனிப்போல்
 நெஞ்சில் ஓர் ஈரம்!!

முகநூலில் சொல்ல மறந்த காதலைக்கண்டேன்!
பாலைவணத்தில் காணல்நீர்ப்போல்
நெஞ்சில் ஓர் ஈரம்!!

ஒருதலைக்காதல் மணமுடித்து விலகிட கணடேன்
பொங்கிடும் எரிமலையை தழுவும் 
கடலலைப்போல் நெஞ்சில் ஓர் ஈரம்!!

நெகிழ்ப்பாறை என வாழ்க்கை 
மெல்ல மெல்ல நகர கண்டேன்
இருந்தும் உறைப்பனிப்போல் 
நீங்காமல் நெஞ்சில் ஓர் ஈரம்!!

சாளரத்திரை விலகி கதிரொளியில் 
மண உரவின் இன்முகம் கண்டேன்!
பாறைவிரிசலில் முளைவித்து உணர்வதைப்போல் 
நெஞ்சில் ஓர் ஈரம்!!

அதிகாலை புதுமலர்ப்போல் 
மார்பில உறங்கும் என் மகள்!
பருவமழையின் முதல்ச்சாரல்ப்போல்
என் நெஞ்சில் ஓர் ஈரம்!!

-இரா. ராகவேந்திரன்

Comments

Post a Comment

Popular posts from this blog

சோழனும் தமிழனும்

மெய்யறிவு அறிதல்