சோழனும் தமிழனும்
பதிவு : 13
தலைப்பு : சோழனும் தமிழனும்
பஞ்சத்தில் உதவுமென கலசத்தினுள்
நெல்லை சேமித்த சோழன் அன்று
பாட்டன் நிலத்தை வீட்டுமனையாக்கி
விற்று வருகிரான் தமிழன் இன்று
கடற்ப்படைகொண்டு நாடுகள் பல வென்று
புலிக்கொடி நாட்டினான் சோழன் அன்று
கடைத்தெருவில் மேடை அமைத்து
கட்சிக்கொடி ஊனுகிறான் தமிழன் இன்று
வெள்ளம் தடுக்க காவிரி குறுக்கே
கல்லனை கட்டினான் சோழன் அன்று
வரண்ட ஆற்றின் மணலையும்
திருடி விற்க்கிரான் தமிழன் இன்று
கடல்க்கடந்து வணிகம் செய்து
கலை அறிவியல் வளர்த்தான் சோழன் அன்று
கல்வி மருத்துவம் மதுவைக்கூட
வணிகமாக்கினான் தமிழன் இன்று
வடக்கே பாலப்பேரரசை வென்று
கங்கை வரை எல்லை கொண்டான் சோழன் அன்று
காவிரி கட்சத்தீவில் உரிமைக்காக்க தவறியதால்.
கன்னடமுதல் இலங்கை வரை தொல்லை
கொண்டான் தமிழன் இன்று
-இரா. ராகவேந்திரன்
Comments
Post a Comment